பாரவூர்தியை முற்றுகையிட்டு எரிவாயு கொள்கலன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

கொழும்பு – ஆமர் வீதியில், எரிவாயு கொள்கலன்களை ஏற்றிச்சென்ற, லிட்ரோ எரிவாயு விநியோக பாரவுர்தியை வழிமறித்த பொதுமக்கள், அதிலிருந்து பெருந்தொகையான எரிவாயு கொள்கலன்களை எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

பாரஊர்தியிலிருந்து பெரும்பாலான எரிவாயு கொள்கலன்கள் காணாமல் போயுள்ள நிலையில், பொலிஸாரின் தலையீட்டினால் மீதமிருந்த எரிவாயு கொள்கலன் பாதுகாக்கப்பட்டதுடன், பாரவூர்தி பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பாரஊர்தியிலிருந்து சுமார் 52 எரிவாயு கொள்கலன்கள் காணாமல் போயுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *