மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வது அவசியம்-தினேஷ் குணவர்தன வலியுறுத்து.

அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவித்த சபை முதல்வர் தினேஷ் குணவர்தன,

பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், அரசியல் முறைமையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, மக்கள் எதிர்கொண்டுள்ள  பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வது  அவசியமென தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன்  ஊடாக ஆட்சி அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் விரும்புவதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *