எரிவாயு வழங்கக் கோரி அடித்துக் கொள்ளும் பொதுமக்கள்! பேலியகொடவில் குழப்பம்

கம்பஹா – பேலியகொட பகுதியில் எரிவாயு வழங்கக் கோரி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வரிசையில் காத்திருக்கும் மக்கள் கூறுகையில்,

எரிவாயு இல்லாத காரணத்தால் தான் நாங்கள் வந்து இவ்வாறு வீதியில் நிற்கின்றோம்.

எனினும் தற்போது மக்களுக்கிடையில் அடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எரிவாயு இல்லை என நாங்கள் வீதியை மறிக்க முற்படும் போது மக்களே வந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

இளைஞரொருவருக்கும் தாக்கியுள்ளனர். பொல்லுகளையும் தடிகளையும் தூக்கிக் கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், எரிவாயு கிடைக்காமையால் வீதிகளை மறித்து அமர்ந்த எங்களை அடித்து விரட்டுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, வீட்டு எரிவாயு கொள்கலன்களை வழங்குவதற்கு போதியளவு எரிவாயு கையிருப்பு இல்லாததால், தேவையில்லாமல் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *