
கொழும்பு, மே 09
காலிமுகத்திடலை நோக்கிச் சென்ற மஹிந்த ஆதரவாளர்கள் பொலிஸாரால் தடுக்க முற்பட்டுள்ளதுடன் தடையை மீறி போராட்டகாரர்கள் காலி முகத்திடல் போராட்டகாரர்களின் கூடாரங்களை அடித்து நொருக்கியுள்ளனர்.
அத்துடன் மகிந்த ஆதரவாளர்களுடன் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம், காலிமுகத்திடலிலும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரைப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதுடன் கண்ணீர்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மைனா கோ கமவில் போராட்டக்காரர்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அலரி மாளிகையில் இருந்துச் சென்ற மஹிந்த ஆதரவாளர்களால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மைனா கோ கம தற்போது போர்க்களமாக மாறியுள்ளது. மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் கோசமெழுப்பிய போராட்டக்காரர்கள் “காலிமுகத்திடலுக்குச் செல்ல இதுதான் நேரம்“ என தெரிவித்த நிலையில், தற்போது காலிமுகத்திடலை நோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.