பொலிஸாரின் தடைகளை மீறிக்கொண்டு காலிமுகத்திடலுக்கு செல்கின்றது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அணி.
பொலிஸ் தடையை உடைத்துக்கொண்டு பிரதமரின் ஆதரவாளர்கள் அணி காலி முகத்திடலில் நோக்கிச் செல்கின்றனர்.
இதேவேளை பொலிஸார் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை கோட்டாகோகமவுக்கு செல்வதைத் தடுத்து வருகிறார்கள்.
எவ்வாறாயினும் கோட்டாகோகமவில் உள்ள கூடாரங்களை பொலிஸார் அகற்றவில்லை என்றால், நாங்கள் அவற்றை அகற்றி அங்கிருப்பவர்களை விரட்டியடிப்போம் எனவும் அங்கிருப்பவர்கள் எச்சரிப்பதை அவதானிக்க முடிகிறது.