
கொழும்பு, மே 09
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது அலரிமாளிகையில் கூடியிருந்தவர்கள் காலி முகத்திடலுக்குச் சென்று அங்கு இருந்த கூடாரங்களை தாக்கி தீ வைத்து எரியூட்டியுள்ளனர்.
மேலும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதில் 9 பேர் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.