அசானி புயல் நாளை ஒடிசா கடல் பகுதியை நெருங்கும் என அறிவிப்பு!

<!–

அசானி புயல் நாளை ஒடிசா கடல் பகுதியை நெருங்கும் என அறிவிப்பு! – Athavan News

வங்கக் கடலில் நிலவிய அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடல் பகுதிகளை நெருங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 25 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து வரும்  குறித்த புயல்            விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் பூரிக்கு தெற்கு தென் கிழக்கே 680 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் படிப்படியாக வலுவிழக்க கூடும் எனக் கூறப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஒடிசா மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *