‘கோ கோட்டா கம’ போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்து வருகிறது! ரணில் கடும் எச்சரிக்கை

அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்து வருகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, “கோட்டாகோகம” போராட்டத் தளத்தை அரசாங்கம் சீர்குலைக்கும் பட்சத்தில், அனைத்துக் கலந்துரையாடல்களிலிருந்தும் விலகுவதாக ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

நெருக்கடியைத் தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு உதவுவதை நிறுத்தப்போவதாகவும் அரசாங்கக் கட்சித் தலைவர்களிடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *