போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டக்களத்திற்கு வந்த சஜித் மற்றும் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டக்ளத்திற்கு ஜேவிபி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க விஜயம் செய்துள்ளார்.
அத்தோடு, கலவரத்திற்கு நடுவிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி வருகின்றனர்.