
கோட்டா கோ கமவில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த ஒரு மாத போராட்டமானது இரத்தகளரியுடன் நிறைவடையவுள்ளதாக கோட்டா கோ கம போராட்டத்தின் ஏற்பாட்டளர்களில் ஒருவருமான ரெட்டா என்ற ரசிது சேனாரத்ன தனது சமூக வளைத்தளங்களில் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
கோட்டா கோ கம போராட்டத்தை முடக்குவதற்காக குண்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களது கைகளில் கற்களையும் தடிகளையும் காணக்கூடியதாக உள்ளதாக சமூக செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.