
கொழும்பு, மே 09
காலிமுகத்திடலில் தற்போது அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பலத்த இராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதுடன் இராணுவத்தளபதி சவேந்தி சில்வா நேரடியாக களத்திற்கு வருகை தந்து போராட்டத்தை அடக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தடுக்க தவறியதாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் குற்றம்சுமத்தி வருகிறார்கள்.