நாட்டை ஆட்சி செய்த எவரும் மக்கள் தொடர்பில் சிந்தித்து செயற்படவில்லை! – பேராயர்

இதுவரை நாட்டை ஆட்சி செய்த எவரும் மக்கள் தொடர்பில் சிந்தித்து செயற்படவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத்திடலில் தற்போது எழுவது சுதந்திர போராட்டத்தின் முழக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாடு தொடர்பிலோ அல்லது பொதுமக்கள் தொடர்பிலோ சிந்திக்காது தங்களது கட்சியை மாத்திரம் கருத்திற் கொண்டு நிர்வாக முறைமைகளை அமைத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *