ஊரடங்குக்கு மத்தியில் காலிமுகத்திடல் பதற்ற நிலை தொடர்கிறது.

காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் இன்று காலை முதல் அரசதரப்பு ஆதரவாளர்களுக்கும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவியது.

இந்நிலையில் அரச தரப்பு ஆதரவாளர்களால் கோட்டா கோ கம கூடாரங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் தளபாடங்கள் அடித்து நொருக்கப்பட்டது.

இதேவேளை குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குறிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சற்றுமுன் கொழும்பின் பல பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் தற்போது வரை அங்கே ஏராளமான மக்கள் திரண்டு அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

இதேவேளை குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திசாநாயக விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *