வன்முறை தேசத்தின் தற்போதைய நிலையை மேலும் மோசமாக்கும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.- எனப் பதிவிட்டுள்ளார்.
மஹிந்தவின் ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு முன்னால் இருந்த மைனா கோ கமா மற்றும் காலி முகத்திடலில் உள்ள கோட்டாகோகம ஆகிய இரண்டு போராட்ட தளங்களையும் அடித்து நொறுக்கு தீயிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.