
காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க முடியாததொரு வங்குரோத்துச் சர்வாதிகாரம், அலரி மாளிகையையும் காலி முகத்திடலையும் சூழ அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் மீது அப்பட்டமான வன்செயலாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
கோத்தாவும், மஹிந்தையும் கேவலப்பட்டு வெளியேறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
பொது ஜன முன்னணியரின் இந்த எல்லை மீறிய செயல் அவர்களின் கடைசிக் கோரத் தாண்டவமாகும்.
அவர்கள் தவறாக ஒரு தலைமுறையினருடன் குழம்பிக் கொண்டார்கள்.
இந்தத் தோற்று போன குண்டர் கும்பலின் அட்டகாச அடந்தேற்றம் பரவலான கண்டனத்துக்குள்ளாகும் என குறிப்பிட்டுள்ளார்.