கொழும்பு – காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரத்தின் போது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களை பொதுமக்கள் தாக்கியதோடு, அவர்களின் ஆடைகளை களைந்தனுப்பியுள்ளனர்.
கொழும்பு காலி முகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டு வந்த அமைதி வழியான போராட்டம் இன்று குழப்பப்பட்டது.
மகிந்தவின் ஆதரவாளர்கள் என்றும் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்து பொல்லுகளுடனும் தடிகளுடனும் சென்ற குழுவினர் போராட்டக்களத்தில் உள்ள கூடாரங்களை எரித்தும் அடித்து உடைத்தும் அராஜக செயலில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக போராட்டக்களம் யுத்தப் பூமியாக மாறியதை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மகிந்தவின் ஆதரவாளர்கள் என்று தெரிவித்து வந்தவர்களை வாவிக்குள் பொதுமக்கள் தள்ளியுள்ளனர்.
மகிந்தவின் ஆதரவாளர்கள் வருகைத் தந்த பேருந்தினை மறித்து தாக்குதல் நடத்தப்பட்டது.
