இலங்கையில் அசாதாரண சூழ்நிலை – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முக்கிய அறிவித்தல்

இலங்கையின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களுடைய விமான சீட்டுகள் மற்றும் கடவுச்சீட்டினை விமான நிலைய சோதனைச் சாவடிகளில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்களிடம் வழங்கலாம் என அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அத்துடன், விமானம் புறப்படும் நேரத்திற்கு 03 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *