நாட்டில் அனைத்து புகையிரத சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிவித்தலை இலங்கை புகையிரத பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
எனினும் இன்றைய தினத்திற்கான புகையிரதங்கள் அந்தந்த பிரதேசங்கள் வரை மட்டுமே இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொலிஸ் ஊரடங்க பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து கண்டனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.