சனத் நிஷாந்த எம்.பியின் வீடு தீக்கிரை – சில அரசியல்வாதிகளின் வீடுகள் முற்றுகை! – தொடரும் பதற்ற நிலை

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டக்காரர்கள் அவரது அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளதுடன், உடைமைகளையும் சேதமாக்கியுள்ளனர்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவின் இல்லம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லம் தீ வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் தந்தையின் வீடும் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *