கொழும்பு,மே 09
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன், தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குருநாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லம் மற்றும் அலுவலகம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




