ஒன்று கூடுதல் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியன ஒரு ஜனநாயக சமுதாயத்தின் பிரதான தூண்களாகும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனவே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை ஜனநாயக உரிமையினை மீறும் செயலாகும் என இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.