
கொழும்பு,மே 09
வைத்திய நிபுணர் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து செவ்வாய்க்கிழமை பூரண தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
குழந்தைகள் வைத்தியசாலை, கர்ப்பிணித் தாய்மார் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முழுமையாக இடம்பெறும்.
இந்த போராட்டம் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட இருப்பதால் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு மாத்திரம் வைத்தியசாலைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு, இதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மனம் வருந்துகிறோம்.
மேலும், அரச மருத்துவ சங்கமானது இந்தச் செயலை வன்மையாக கண்டிப்பதோடு மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது என்றுள்ளது.