காலிமுகத்திடல் அடாவடித்தனம்-மாக்சிச லெனினிச கட்சி கண்டனம்.

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் மகேந்திரன் குறிப்பிடும்போது,

கடந்த ஒருமாதமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்தை பதவிவிலகுமாறு வலியுறுத்தியும் காலி முகத்திடலிலும் நாடுபுராவும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்று மஹிந்த அதரவு குண்டர் படை மேற்கொண்ட அராஜக அடவடித்தனத்தை எமது கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்கமுடியாத கையாலாகாத அரசாங்கம் இன்று தனது காடைத்தனத்தை கட்டவிழ்த்து விட்டிருகிறது.

இது இந்த அரசாங்கத்தின் மிக மோசமான மக்கள் விரோத போக்கினை வெளிப்படுத்தும் நடவடிக்கையாகும். மக்கள் கடந்த ஒருமாதமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் போராட்டங்களை சிதைத்து தமது கேடுகெட்ட அரசியலை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்த அரசின் கபடத்தனம் தற்போது நாட்டை கொந்தளிப்புக்குள் தள்ளியுள்ளது.

அரசாங்கத்தை பதவி விலகக்கோரி அமைதியாக போராடிய மக்களின் கோபாவேசம் தற்போது வெளிப்படத் தொடங்கிருக்கிறது.

இந்த நேரத்தில் மகிந்த ராஜபக்ச அவரது அமைச்சரவையும் பதவி விலகியிருப்பது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே மேலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையையும் மக்களின் கோரிக்கைக்கும் மதிப்பளித்து கோட்டாபாய உடன் பதவி விலக வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு முழுமையாக இந்த அரசு தோற்கடிக்கப்பட்டு மக்கள் சார்பு அரசாங்கம் ஏற்படுத்தப்படும் வரை போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *