
அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அரச ஆதரவு வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர்கள் கட்டவிழ்த்துவிட்ட அழிவுக்கு ராஜபக்ஷகள்தான் முழுப் பொறுப்பு என்றும் அவர்கள் செய்த குற்றச் செயல்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.