இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையை தூண்டுவதற்கு முயற்சி- சந்திரிக்கா எச்சரிக்கை.

இலங்கையில் நேற்றுமுதல் இடம்பெறும் அசம்பாவிதங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும் அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு நாசகாரர்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தயவு செய்து இதை நிறுத்த உங்கள் நிறுவனத் திறமையைப் பயன்படுத்தவும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *