நீர்கொழும்பில் கதறும் குடும்பத்தின் வாக்குமூலம்-(வீடியோ இணைப்பு)

நீர்கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற வன்முறைச்சம்பவத்தில் தீக்கிரையாக்கப்பட்ட வீடொன்றின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

எமக்கு அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லை” என நீர்கொழும்பில் வீடு சூறையாடப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட தம்பதியினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

இது என்னுடைய வீடு. நாங்கள் எந்த அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இல்லை
நாங்கள் ஜெர்மன் இனத்தவர்கள்.நாங்கள் இங்கு யாருக்கும் வாக்களிக்கவும் இல்லை.

இன்று என்னுடைய பிள்ளைகள் அழுகின்றனர். எங்களுடைய பைகள் எங்கே அதில் இருந்த புத்தகங்கள் எங்கே என்று.

உண்மையில் நாங்கள் எந்தக் அரசியல் கட்சிகளும் துனைபோகவில்லை ஏன் எங்களுடைய வீட்டை இவ்வாறு எரித்தார்கள்.

நான் இப் போராட்டத்திற்குரியவர்களிடம் நான் கேட்கிறேன் பிள்ளைகளின் புத்தகங்களை ஏன் எடுத்து சென்றீர்கள் என்று என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *