
அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆர்ப்பாட்டத்திற்குள் நேற்றையதினம் புகுந்த வன்முறையாளர்களால் பதற்ற நிலை உருவாகியதுடன் அதனை தொடர்ந்து அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்று மதியம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக மஹிந்த அறிவித்த நிலையில் நேற்று மாலை நாட்டை விட்டு சென்றுவிட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் அதனை மறுத்த மஹிந்தவின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச
மஹிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் .அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக மாட்டார் எனவும், தனக்குப் பின்வருபவரை தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.