
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்ட மைதானத்திற்கு நிரந்தர நினைவுச் சின்னமாக நினைவுத்தூபியொன்றை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நாட்களில் மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வது கடினம் என்று காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவின் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதனை கட்டுவதற்கு தேவையான இரும்பு கம்பி, மூங்கில், இரும்பு தகடுகளை வழங்கினால் பெரும் ஆதரவாக இருக்கும் என்கின்றனர் போராட்டக்காரர்கள். கட்டப்படும் நினைவுச்சின்னத்தின் உயரம் 20 அடி ஆகும்.