இலங்கையின் பிரபல இசைக் கலைஞர் இராஜ் வீரரட்னவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் மீது பல்வேறு பொருட்களை வீசி எறியும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான பங்களிப்பினை இராஜ் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் மீது நேற்றைய தினமும் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.