
கொழும்பு,மே 10
நேற்று திங்கட்கிழமை அரச ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து 14 இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.