
கொழும்பு,மே 10
பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் ஆயுதப்படை ஒரு போதும் ஈடுபடாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஜெசவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மற்றும் தனிநபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நபர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு முப்படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த அறிவித்தலை ராணுவ தளபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.