காஷ்மீரில் ஹைபிரிட் பயங்கரவாதிகள் 4 பேர் கைது

ஸ்ரீநகர்,மே 10

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பெமினா பகுதியில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் உறுப்பினராக உள்ள ‘ஹைபிரிட்’ பயங்கரவாதிகள் 4 பேரை ஸ்ரீநகர் நகர பொலிஸார் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் இணைந்து கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 4 பிஸ்டல்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.  இந்த ‘ஹைபிரிட்’ பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரின் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பதில்லை.

அவர்களை பயங்கரவாத குழுக்கள் ஒன்று அல்லது இரண்டு முறையே தாக்குதல் நடத்த பயன்படுத்தி கொள்ளும்.  கடந்த 2021ம் ஆண்டில் காஷ்மீரில் பொதுமக்கள், பொலிஸார், அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் என பலரை இலக்காக கொண்டு 20க்கும் கூடுதலான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களில் இதுபோன்ற ‘ஹைபிரிட்’ வகை பயங்கரவாதிகளே ஈடுபட்டு உள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்.  அவர்களை அடையாளம் காண்பதும், பயங்கரவாத குழுக்கள் அவர்களை பயன்படுத்தி கொள்ளாமல் தடுத்து நிறுத்துவதும் பெரும் சவாலான பணியாக உள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *