விரட்டி விரட்டி தாக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குழுவொன்றால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது தேசபந்து தென்னக்கோனை சிலர் விரட்டி விரட்டி தாக்கும் காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.

சற்று முன்னர் அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் தேசபந்து தென்னக்கோனின் வாகனம் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து உடைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

தேசபந்து தென்னக்கோனின் சாரதி கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து தென்னக்கோன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சாரதி கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கிய பின் வைத்திசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *