பரபரப்பான நிலையில் சஜித்தை சந்தித்த சீனத்தூதுவர்

நாட்டில் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் வண்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் பொலீஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் ஆங்காங்கே மோதல் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் இலங்கைக்கான சீனத்தூதர் கி செங்ஹோங் இன்றையதினம்(11) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன் எதிர்கட்சித் தலைவர் சீனத் தூதுவரிடம் இந்த பேரழிவு தருணத்தில் சகோதரத்துவ கரங்களை இலங்கைக்கு நீட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

இலங்கையை தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீட்க சீனாவின் ஒப்பற்ற ஒத்துழைப்பு அவசியம் என கூறிய எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு தலையிடவும் என போரிக்கை விடுத்தார்.

இச்சந்திப்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் இணைந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *