இலங்கைக்கு படைகளை அனுப்புகிறதா: இந்தியா விளக்கம்

கொழும்பு,மே 11

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை இந்தியா மறுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்,

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் ஊக அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுக்க விரும்புகிறது.

இந்த அறிக்கைகள் மற்றும் இதுபோன்ற கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை.

இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெளிவாகத் தெரிவித்தார்” என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *