உக்ரைனுடனான போரை நிறுத்தும் எண்ணம் ரஷ்யாவிற்கு இல்லை; அமெரிக்கா

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றுவது மாத்திரமன்றி பாரிய திட்டம் ஒன்றுடன் உள்ளார் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க புலனாய்வுத்துறை. செவ்வாய்க்கிழமை, அமெரிக்க சட்ட அறிஞர்களுடன் உரையாற்றும் போது,

அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை தலைவர் அவ்ரில் ஹைன்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடும் போது, தற்போது டொன்பாஸ்சில் நடைபெற்று வருவது தற்காலிக தாக்குதல் மட்டுமே எனவும், புடின் ரஷ்யா மீது ஒரு நீண்டகால போரை திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் உக்ரைனில் பல இடங்களைக் கைப்பற்ற விரும்புகிறார் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்க புலனாய்வுத்துறைக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக எடுத்துள்ள முடிவுகளின்படி, புடின் கருங்கடல் கரை வரையில் தனது ஆட்சி எல்லையை நீடிக்க விரும்புகிறார் எனவும் அவர் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *