கொழும்பில் இடம்பெற்ற அமைதியின்மை: 09 பேர் இதுவரை உயிரிழப்பு !

கொழும்பில் இடம்பெற்ற அமைதியின்மையைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் பற்றிய விவரங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 41 வாகனங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதோடு 61 வாகனங்கள் முழுமையாக சேதம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வன்முறைகளின் போது வீடுகள் உட்பட 136 சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப் பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *