அலரிமாளிகைக்கு வெளியே கடந்த 9ஆம் திகதியன்று ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் முன்னாள் பிரதமருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் நிலைமை வழமைக்கு திரும்பியதும் அவர் விருப்பமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் எனவும் கமல் குணரட்ன தெரிவித்தார்.

கடந்த 10ஆம் திகதியன்று அதிகாலையில் அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச, சங்ரிலா விருந்தகத்தின் மேல் மாடியில் இருந்து உலங்கு வானூர்தியின் மூலம் திருகோணமலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *