முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13வது வருட நினைவேந்தல் எதிர்வரும் 18ம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதி மற்றும் அதனைச்சூழ இராணுவத்தினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்போது அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் வீடுகளிற்குச் சென்றும் அவர்களை வீதிகளில் வைத்து மறித்தும் இராணுவப் புலனாய்வுத் துறையினர் ‘முள்ளிவாய்க்காலுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்’ என விசாரித்து மிரட்டும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

