நோயாளியை அம்பியூலன்சில் ஏற்றி கடை கடையாக திரிந்த சாரதிக்கு நேர்ந்த கதி

அண்மையில் யாழில் நோயாளர் காவு வண்டியின் சாரதியும் சுகாதார ஊழியரும், நோயாளிகளை ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் தமது சொந்த தேவைகளுக்காக அவர்களை நடுவீதியில் நிறுத்தி வைத்து அசண்டையீனமாக செயற்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவுவண்டி சாரதியும் ஊழியருமே மேற்படி அசண்டையீனமாக செயற்பட்டுள்ளனர்.

குறித்த வண்டியில் நோயாளிகளை ஏற்றிய சாரதி, அரைமணி நேரத்துக்கு மேலாகியும் உணவகத்தில் உணவு சாப்பிடுவதற்காக நேரத்தை வீணடித்துள்ளார். அதேநேரம் வண்டியில் வந்த சுகாதார ஊழியர் வங்கிக்கு சென்றுள்ளார்.

அவரும் தனது சொந்த தேவையை நிறைவேற்ற வெளியே சென்றுள்ளார்.குறித்த வண்டியில் முதியவரும் இரு பெண் நோயாளர்களும் இருந்துள்ளனர்.இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனிடம் சமூகம் மீடியா தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த சாரதி மற்றும் ஊழியர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *