
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை வியாழன் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாளையதினம் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து நிலையை கருத்தில்கொண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.