கொழும்பு, மே 12
இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள சுற்றுலாப் பயணிகளை மீள்பரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் நிலவி வரும் அரசியல் பதற்றம் காரணமாக அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
