இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூர் அறிவிப்பு!

இலங்கையில் மோதல்கள் வெடித்ததையடுத்து, இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தியது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கவும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு பொருளாதார நெருக்கடி ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது, ஆனால் இந்த வாரம் பொதுமக்களின் கோபம் வன்முறையாக வெடித்தது.

இது நாடு தழுவிய மோதல்களைத் தூண்டியது, குறைந்தது இரண்டு போலீசார் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மற்றும் 136 வீடுகள் சேதமடைந்துள்ளன.

எதிர்ப்புகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களைத் தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள சிங்கப்பூரர்கள் அறிவுறுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவர்கள் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணித்து உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக உதவி தேவைப்படுவோர் கொழும்பில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தை +94-11-5577300, +94-11-2304444, +94-11-5577111 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது nawaloka [slt.lk”>nawaloka@slt என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்கள் 24 மணிநேர MFA கடமை அலுவலகத்தை +65 6379 8800/8855 என்ற எண்ணில் அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *