
ரணில் ஆடிய கேமை எங்களால் ஆட முடியாமல்போனது ஏன் என்று பலரும் வினவுகின்றனர் எனவும் அதற்குரிய பதிலை வழங்கி மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் உயர் குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
ரணில் பிரதமர் எனக் கூறுவதை விட ராஜபக்சக்கள் தமது குற்றச்செயல்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக கூலிக்கமர்த்திய காவல்காரன் தான் ரணில்! ரணில், ராஜபக்ஷகளின் தெரிவு!அதுவொரு திறமையாகுவது சஜித், மைத்திரீபால உட்பட கழிசட அரசியல் ஆட்டத்தில் ஈடுபடுகின்ற (விற்கும், விலைபோகும் உள்ளிட்ட)வர்களுக்குத்தான்.
ஏனெனில், சஜித்தும் மைத்திரீயும் நேற்று கோட்டாபயவிடம் ஏலத்திற்கு விலைபோனவர்கள்தாம். ரணில் சில்லரைக்கு விலைபோனார்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ராஜபக்ஷகளில் ஒருவர் பார்த்திருக்கும்போதே நாட்டின் மக்கள் பலத்துக்கு ராஜபக்சாக்களை திருகோணமலையில் தீவொன்றுக்குள் தள்ளிவிட முடிந்தது.
ராஜபக்சாக்கள் கால் வைப்பதற்கு இலங்கையில் ஒரு சதுர அங்குல நிலம் கூட இல்லாமல்போனது!மே மாதம் ஒன்பதாம் திகதி ராஜபக்ஷகள் மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுசரணையுடன் தாக்கி மக்களின் பலத்தை குறைத்து மதிப்பிட்டனர். அதன் பெறுபேற்றைக் கண்டனர்.மே மாதம் 12 ஆம் திகதி ரணிலை நியமித்து மீண்டும் மக்கள் ஆணையை குறை மதிப்பீடு செய்திருக்கின்றனர்.
மக்கள் அதற்கு பதில்கொடுப்பார்கள். மக்களின் பலத்தையும் மக்களின் எழுந்து நிற்கும் சக்தியையும் நாம் நம்புகின்றோம்.
ஆகவே எங்களுக்கு இந்த கழிசட அரசியல் கேம்களை ஆட அறிவுரை கூறுவதற்கு வரவேண்டாம். அவ்வாறு செய்யவில்லை என்பதற்காக முதுகெலும்பை முறித்துக்கொள்ளவும் வேண்டாம்.
எங்களை மேலும் மேலும் கொள்கைப் பற்றுடையோராகுங்கள் என்றும், மக்கள் நேயராகுங்கள் என்றும் வலியுறுத்துங்கள்!இம்மக்கள் நேய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான அறிவும் முதுகெலும்பும் மக்களில் பெரும்பான்மையினருக்கும் எங்களுக்கும் உள்ளன எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.