நிதி உதவிகளுக்காக மன்றம் ஒன்றை நிறுவுங்கள்! வெளிநாட்டு இராஜதந்திரிகள் ரணிலுக்கு ஆலோசனை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய அமெரிக்கா, சீனா, இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, அவர்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சில முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chang நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதேபோல இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்கவும் பிரதமருக்கு குறித்த நாடுகளின் இராஜதந்திரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பிரதமராக பதிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க அலரிமாளியில் இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *