நாட்டில் மேலும் பதிவான கொவிட் இறப்பு

கொழும்பு,மே 13

நாட்டில் நேற்று வியாழக்கிழமை கொவிட் தொற்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,511 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *