“கோட்டாகோகம” போராட்ட பூமியின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது விசாரணைக்காக கோட்டாகோகம ஆர்ப்பாட்டத்தின் பிரதிநிதிகள் இருவரை அழைக்க தீர்மானித்துள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் இன்று பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த இருவர் அழைக்கப்படவுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் ஏற்பட்ட வன்முறையின் போது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டத் தவறியதைக் கண்டறியவே சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்.

எனினும் மனித உரிமைகள் ஆணையத்துடனான சந்திப்பின் விபரங்களை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *