
கொழும்பு,மே 13
கடந்த 9 ஆம் திகதி அலரிமாளிகையில் கலவரப் பிரிவிற்கு தலைமை தாங்கிய போது விபத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் ரங்கன துஷாரவை பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு உயர்த்துவதற்கு பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பொலிஸ் வெகுமதி நிதியில் இருந்து 5 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மே மாதம் 10 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற கலவரத்தின் போது கண்ணீர்ப்புகை துப்பாக்கியை பயன்படுத்தியதில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உப பொலிஸ் பரிசோதகர் ரங்கன துஷார உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.