புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில் விக்ரமசிங்க சர்வதேசத்திடம் மேலும் நிதி உதவியினை வழங்கும்படி கோரியுள்ளார்.
இலங்கை மக்கள் மூன்று நேர உணவை பெறுவதற்கு தாம் உறுதியளிப்பதாக தெரிவித்துள்ள அவர், பட்டினி பிரச்சினை இலங்கையில் ஏற்படாத வகையில் தாம் உரிய நடவடிக்கையினை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், பழைய நிலைமைக்கு கொண்டு வரும் செயல்பாடு துரித கதியில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களை பொறுமையுடன் செயல்படும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு போராடும் மக்களின் உணர்வுகளுடன் தாம் ஒத்துப் போகின்ற போதிலும் அது நடக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொண்டிருப்பது செயல்வடிவத்தை பெறாது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.