இலங்கையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4,000ஐக் கடந்தது.
மேலும் நேற்று பதிவான மரணங்களில் 17 பெண்களும் 26 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.